Tamil News
Home செய்திகள் இலங்கை அரசாங்கம் உள்ளூராட்சி தேர்தலை உடனடியாக நடத்தவேண்டும் – அமெரிக்க செனெட் குழு

இலங்கை அரசாங்கம் உள்ளூராட்சி தேர்தலை உடனடியாக நடத்தவேண்டும் – அமெரிக்க செனெட் குழு

இலங்கை அரசாங்கம் சுதந்திரமான நியாயமான  உள்ளுராட்சி   தேர்தலை உடனடியாக நடத்தவேண்டும் என அமெரிக்க செனெட்டின் வெளிவிவகார உறவுகளிற்கான குழு வேண்டுகோள் விடுத்துள்ளது.

டுவிட்டர் செய்தியொன்றில் அமெரிக்க செனெட்டின் வெளிவிவகார குழு இந்த வேண்டுகோளை விடுத்துள்ளது.

இலங்கை மக்களின் குரல்கள் ஒலிக்காமலிருப்பதற்காக மேற்கொள்ளப்படும் எந்த முயற்சியும் மறுக்க முடியாதபடி ஜனநாயக விரோதமானது இலங்கையர்களின் உரிமைகளை நேரடியாக மீறும் செயல் என அமெரிக்க செனெட் குழு தெரிவித்துள்ளது.

Exit mobile version