கொலை வழக்கில் குற்றம் நிரூபிக்கப் பட்டு மரண தண்டனை வழங்கப் பட்டிருந்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவுக்கு ஜனாதிபதியின் மன்னிப்பின் கீழ் விடுதலை வழங்கப் பட்டுள்ளது.
இந்நிலையில், பாரத லக்ஷ்மன் பிரேமச்சந்திரவின் கொலைச் சம்பவம் தொடர்பாக மரண தண்டனை விதிக்கப்பட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவுக்கு ஜனாதிபதி மன்னிப்பு வழங்கி விடுதலை செய்தது அரசியலமைப்புக்கு விரோதமானது என அறிவிக்கக் கோரி உயிரிழந்த பாரத லக்ஷ்மன் பிரேமச்சந்திரவின் மகளும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான ஹிருணிகா பிரேமச்சந்திர உயர் நீதிமன்றில் அடிப்படை உரிமை மீறல் மனுவைத் தாக்கல் செய்துள்ளார்.