Home செய்திகள் படையினர், காவல்துறையினரின் கெடுபிடிகளுக்கு மத்தியிலும் தாயகத்தில் உணர்வுடன் மாவீரர் நாள்

படையினர், காவல்துறையினரின் கெடுபிடிகளுக்கு மத்தியிலும் தாயகத்தில் உணர்வுடன் மாவீரர் நாள்

படையினர், காவல்துறையினரின் கெடுபிடிகளுக்கு மத்தியிலும் தாயகத்தில் உணர்வுடன் மாவீரர் நாள் நினைவுகூரப்பட்டுள்ளது.

முல்லைத்தீவில் சுடரேற்ற ஆயத்தமான போது, படையினரும் காவல்துறையினரும்  தடுத்த போதும், மக்கள் சுடரேற்றினார்கள். இவ்வேளையில் பீற்றர் இளஞ்செழியன் கைது செய்யப்பட்டதுடன், அவரின் மனைவி காவல்துறையினரின் தாக்குதலுக்கு உள்ளாகினார்.

21 61a22fd597315 படையினர், காவல்துறையினரின் கெடுபிடிகளுக்கு மத்தியிலும் தாயகத்தில் உணர்வுடன் மாவீரர் நாள்

வல்வெட்டித்துறையில் சிவாஜிலிங்கம் தலைமையிலான குழுவினர் இறந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக சென்றுள்ள நிலையில் படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.

சிவஞானம் சிறீதரன் அவர்கள் கொழும்பில் மாவீரர்களுக்கு சுடரேற்றி அஞ்சலி செலுத்தினார்.

சீ.வீ.கே சிவஞானம், விந்தன் கனகரட்ணம் ஆகியோர் தமது இல்லங்களில் சுடரேற்றி அஞ்சலி செலுத்தினர்.

மேலும் தாயக மாவீரர்நாள் பதிவுகள்

படையினரின் கெடுபிடிகளுக்கு மத்தியிலும் மாங்குளம் வன்னிவிளாங்குளம் மாவீரர் துயிலும் இல்லத்தில் சுடர் ஏற்றப்பட்டது.

Exit mobile version