மாவீரர் நாள்- அஞ்சலி செலுத்த பலருக்கு நீதிமன்றத்தின் ஊடாக தடை உத்தரவு

நீதிமன்றத்தின் ஊடாக தடை உத்தரவு

மாவீரர் நாள் நிலைவேந்தலிற்கு கிளிநொச்சி நீதிமன்றிலும் தடையுத்தரவு இன்று பெறப்பட்டுள்ளது. கிளிநொச்சி காவல்துறையினரால் கிளிநொச்சி மாவட்ட நீதவான் நீதிமன்றில் இவ்வாறு தடையுத்தரவு இன்றைய தினம் பெறப்பட்டுள்ளது.

கிளிநொச்சி மாவட்டத்தில் கனகபுரம், விசுவமடு, முழங்காவில் ஆகிய பகுதிகளில் மாவீரர் துயிலுமில்லங்கள் காணப்படுகின்றன. குறித்த துயிலுமில்லங்களில் கடந்த 2017 மற்றம் 18ம் ஆண்டுகளில் மாவீர்நாள் நினைவேந்தல்கள் இடம்பெற்றன.

இந்த நிலயைில் 2019ம் ஆண்டு  ஏற்பட்ட ஆட்சி மாற்றத்தின் பின்னர் மாவீரர் நாள் நினைவேந்தல்களிற்கு தடைகள் பிறப்பிக்கப்பட்டன. எதிர்வரும் 27ம் திகதி மாவீரர் நாள் நினைவேந்தல்கள் இடம்பெறும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இன்யை தினம் தடையுத்தரவுகள் பெறப்பட்டுள்ளது.

கிளிநொச்சி பொலிசாரால், 9 பேருக்கு எதிராக இன்று நீதிமன்றத்தின் ஊடாக தடை உத்தரவு பெறப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறிதரன், முன்னாள் வடக்கு மாகாண சபை உறுப்பினர் பசுபதிப்பிள்ளை, கரைச்சி பிரதேச சபைதவிசாளர் வேழமாலிகிதன், கரைச்சி பிரதேச சபை உப தவிசாளர் தவபாலன், கரைச்சி பிரதேச சபை உறுப்பினர்களான, சுப்பையா, சிவகுமார், இயேசுதாசன் மற்றும் கிளிநொச்சி மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் சங்க தலைவி    கதிர்காமநாதன் கோகிலவாணி ஆகியோருக்கே இவ்வாறு தடை உத்தரவு பெறப்பட்டுள்ளது.

அத்துடன்    மாவீரர் நாளை  நினைவு கூருவது தொடர்பில் மட்டக்களப்பு தலைமையகப் காவல்  நிலையத்தினால் நீதிமன்றத் தடையுத்தரவு பிறப்பிக்கக்கோரி மட்டக்களப்பு மறைமாவட்ட ஆயர், அருட்தந்யைர்கள், மட்டக்களப்பு மாவட்ட மக்கள் பிரதிநிதிகள், சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் உட்பட்டோரின் பெயர்கள் உள்ளீர்க்கப்பட்டு மன்றுக்கு அறிக்கை சமர்ப்பிக்கப்ட்டுள்ளது.

ilakku Weekly Epaper 156 November 14 2021 Ad மாவீரர் நாள்- அஞ்சலி செலுத்த பலருக்கு நீதிமன்றத்தின் ஊடாக தடை உத்தரவு