பிரேசிலில் கன மழை – 70க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு

பிரேசிலில் கன மழை

பிரேசிலில் கன மழை: பிரேசிலில் பெய்த கனமழையால் வெள்ளத்தில் சிக்கி இதுவரை 78 பேர் பலியாகினர்.

இதுகுறித்து அரசு ஊடகம் தரப்பில், “பிரேசிலின் ரியோ டி ஜெனிரோவில் செவ்வாய்க்கிழமை மூன்று மணி நேரத்தில் 25.8 செ.மீ  மழை பதிவாகியது.

இந்த கனமழையால் நகரின் பல பகுதிகளில்  வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. குறிப்பாக வடக்குப் பகுதியில் ஏற்பட்ட கடும் வெள்ள பெருக்கால் ஆயிரக்கணக்கான மக்கள் அங்கிருந்து வெளியேற்றப்பட்டு முகாம்களில் தங்கவைக்கப்பட்டனர்.