Tamil News
Home செய்திகள் ஆபத்தான நிலையில் இலங்கையில் சுகாதார சேவை -செஞ்சிலுவைச் சங்கம்

ஆபத்தான நிலையில் இலங்கையில் சுகாதார சேவை -செஞ்சிலுவைச் சங்கம்

இலங்கையில் சுகாதார சேவை மிகவும் ஆபத்தான நிலையில் இருப்பதாக செஞ்சிலுவைச் சங்கம் தெரிவித்துள்ளது.

இலங்கையில் மருத்துவ உபகரணங்களின் பற்றாக்குறை மற்றும் மின்வெட்டு காரணமாக சுகாதார சேவை வீழ்ச்சியடையும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக அந்த அமைப்பு வெளியிட்டுள்ள  ஆய்வறிக்கை தெரிவிக்கிறது.

இந்த நிலைமை காரணமாக அவசர மற்றும் பொதுச் சுகாதார சேவைகள் இரண்டும் பாதிக்கப்பட்டுள்ளதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மருத்துவ உபகரணங்களின் பற்றாக்குறை காரணமாக, சில வழக்கமான அறுவை சிகிச்சைகள் கூட இரத்து செய்யப்பட்டுள்ளதாகவும், இரத்த மாற்று சேவைகள் சீர்குலைந்துள்ளதாகவும் அந்த அமைப்பு கூறுகிறது.

இந்நிலைமை பெருந்தோட்ட மக்களுக்கு மிகவும் கடுமையானதாக மாறியுள்ளதாகவும், தரமான சுகாதார சேவையை பெற்றுக் கொள்வதில் மிகவும் சிரமம் ஏற்பட்டுள்ளதாகவும் அந்த அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version