குரலற்றவர்களின் குரல் அமைப்பினால் சி.வி.விக்னேஸ்வரனிடம் ஒப்படைப்பு

நீண்ட காலமாக சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளின் விபரங்களை குரலற்றவர்களின் குரல் அமைப்பு, தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான சி.வி.விக்னேஸ்வரனிடம் கையளித்தது.

நல்லூரில் அமைந்துள்ள பாராளுமன்ற உறுப்பினர் விக்னேஸ்வரனின் வாசஸ்தலத்தில் நேற்று காலை குரலற்றவர்களின் குரல் அமைப்பினர் அவரை சந்தித்து கலந்துரையாடியதுடன் அரசியல் கைதிகளினுடைய விபரங்களையும் வழங்கினர். பாராளுமன்றத்தில் ஜனாதிபதியை தெரிவு செய்யும்போது அரசியல் கைதி விடுதலை உள்ளிட்ட சில நிபந்தனைகளுடன் ரணில் விக்ரமசிங்கவிற்கு விக்னேஸ்வரன்    ஆதரவளித்தமை குறிப்பிடத்தக்கது.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை சந்தித்து கலந்துரையாடும் போது அரசியல் கைதிகளின் விபரங்களை ஜனாதிபதியிடம் கொடுத்து அவர்களின் விடுதலைக்காக வலியுறுத்துவேன் என பாராளுமன்ற உறுப்பினர் விக்னேஸ்வரன் இதன்போது உறுதியளித்தார்.