Home செய்திகள் ஐரோப்பாவின் பாதி மக்கள் தொகை ஒமிக்ரான் தொற்றால் பாதிக்கப்படும்-WHO

ஐரோப்பாவின் பாதி மக்கள் தொகை ஒமிக்ரான் தொற்றால் பாதிக்கப்படும்-WHO

ஐரோப்பாவின் பாதி மக்கள்

அடுத்த ஆறு முதல் எட்டு வாரங்களுக்குள் ஐரோப்பாவின் பாதி மக்கள் தொகை ஒமிக்ரான் கோவிட் திரிபினால் பாதிக்கப்படுவார்கள் என்று உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது.

டெல்டா திரிபின் பரவலுக்கும் மேல், ஒமிக்ரான் “மேற்கிலிருந்து கிழக்கே எழும்பும் அலையாக” இந்தப் பகுதி முழுவதும் பரவுகிறது. 2021-ஆம் ஆண்டின் கடைசி வரை அனைத்து நாடுகளும் டெல்டா திரிபைச் சமாளித்துக் கொண்டிருந்தன. தற்போது அதைவிட அதிகமாக, தற்போது ஒமிக்ரான் திரிபு ஒரு புதிய மேற்கிலிருந்து கிழக்கே பரவும் அலையை உருவாக்கி வருகிறது என்று உலக சுகாதார நிறுவனத்தின் ஐரோப்பிய பிராந்தியத்துக்கான இயக்குநர் மருத்துவர் ஹான்ஸ் க்ளூஜ் கூறினார்.

மேலும் “2021-ஆம் ஆண்டின் கடைசி வரை அனைத்து நாடுகளும் டெல்டா திரிபைச் சமாளித்துக் கொண்டிருந்தன. தற்போது அதைவிட அதிகமாக, தற்போது ஒமிக்ரான் திரிபு ஒரு புதிய மேற்கிலிருந்து கிழக்கே பரவும் அலையை உருவாக்கி வருகிறது, சியாட்டிலில் உள்ள சுகாதார அளவீடுகள் மற்றும் மதிப்பீட்டிற்கான நிறுவனம் முன்னறிவித்துள்ளதாக மேற்கோள் காட்டியவர், “அடுத்த ஆறு முதல் எட்டு வாரங்களில் இப்பகுதியில் உள்ள 50 விழுக்காட்டிற்கும் அதிகமான மக்கள் ஒமிக்ரானால் பாதிக்கப்படுவார்கள்,” என்றார்.

மேற்கத்திய நாடுகளில் இருந்து பால்கன் பகுதிகளுக்கு வைரஸ் பரவுவதால் ஐரோப்பிய மற்றும் மத்திய ஆசிய நாடுகள், “தீவிர அழுத்தத்தில்” இருப்பதாகவும் அவர் கூறினார்.

அதோடு, “தொற்றுநோயியல் நிலைமையைப் பொறுத்து ஒவ்வொரு நாடும் இப்போது எப்படி எதிர்செயலாற்றுகின்றன, கைவசம் இருக்கக்கூடிய வளங்கள், தடுப்பூசி போடுவது மற்றும் சமூக-பொருளாதார சூழல் ஆகியவை குறித்து தெரிவிக்கப்பட வேண்டும்,” என்றும் கூறினார்.

Exit mobile version