இங்கிலாந்துக்கு குடியேறிகளை கடத்தும் செயலில் ஈடுபட்டு வந்த சிகையலங்கார நிபுணர்?

12 இங்கிலாந்துக்கு குடியேறிகளை கடத்தும் செயலில் ஈடுபட்டு வந்த சிகையலங்கார நிபுணர்?

ஆட்கடத்தலில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டுகளை எதிர் கொண்டுள்ள நேடா அமினி எனும் 41 வயது சிகையலங்கார நிபுணர், குடியேறிகளை கடத்தியது தொடர்பான விசாரணைக்கு பிரான்ஸுக்கு நாடு கடத்த இங்கிலாந்தின் வெஸ்மினிஸ்டர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் ஓகஸ்ட் மாத வரையில் இங்கிலாந்துக்கு சிறிய படகுகள் வழியாக குடியேறிகளை கடத்தி வரும் செயலில் பிரான்ஸில் உள்ள இவரது கணவருடன் சேர்ந்து ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இந்த குற்றச் சாட்டினை மறுத்துள்ள நேடா அமினி அவரது கணவரின் சட்டரீதியான நிறுவனத்தின் வாடிக்கையாளர்கள் என்ற அடிப்படையிலேயே பலருக்கு உதவியதாக கூறியுள்ளார்.

ilakku-weekly-epaper-140-july-25-2021