இலங்கைக்கு வழங்கப்பட்டுள்ள 36 ஆயிரம் மெட்ரிக் தொன் TSP பொசுப்பேற்று உரம், 10 இலட்சத்துக்கும் அதிகமான விவசாயிகளின் நெல் உற்பத்திக்கு உதவியாக இருக்கும் என இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் தெரிவித்துள்ளார்.
Great news –over 36,000MT of TSP fertilizer arrived in port in time for the Yala season thanks to support from @USAIDSriLanka and @FAOSriLanka! The donation will help 1mn+ paddy farmers w rice production & is a sign of the US’s ongoing commitment to supporting #LKA. #USSriLanka75 pic.twitter.com/6LtJ7YbUOR
— Ambassador Julie Chung (@USAmbSL) March 17, 2023
36 ஆயிரம் மெட்ரிக் தொன் TSP பொசுப்பேற்று உரம் தாங்கிய கப்பல் நேற்றைய தினம் கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது
இந்த உரமானது, யு.எஸ் எய்ட் மற்றும் ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் விவசாய அமைப்பினால் இலங்கைக்கு வழங்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், தமது டுவிட்டர் தளத்தில் கருத்து வெளியிட்டுள்ள அமெரிக்க தூதுவர் ஜுலி சங், இது இலங்கைக்கு உதவியளிக்கும் அமெரிக்காவின் உறுதிப்பாட்டின் அடையாளமாகும் என்று குறிப்பிட்டுள்ளார்.