Tamil News
Home செய்திகள் IMFஇன் ஆதரவைப் பெறுவது வைத்தியரைப் பார்க்கச் செல்வது போன்றது – மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர்

IMFஇன் ஆதரவைப் பெறுவது வைத்தியரைப் பார்க்கச் செல்வது போன்றது – மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர்

சர்வதேச நாணய நிதியத்தின் ஆதரவைப் பெறுவது வைத்தியரைப் பார்க்கச் செல்வது போன்றது என மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் இந்திரஜித் குமாரசுவாமி தெரிவித்துள்ளார்.

அது தரும் தீர்வுகள் சில சமயங்களில் விரும்பத்தகாததாக இருக்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கொழும்பில் நடைபெற்ற வைபவம் ஒன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

நிதி நல்லிணக்கத்தைப் பேணுவது இன்றியமையாதது என்றும் அதற்காக அரசியலமைப்பு ஏற்பாடுகள் போன்ற சட்ட காரணிகளால் நிதி முகாமைத்துவம் ஆதரிக்கப்பட வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

இலங்கை மத்திய வங்கியை அபிவிருத்தி வங்கியாகக் கருதாது அதன் சுதந்திரத்தைப் பாதுகாப்பதில் அக்கறை செலுத்த வேண்டும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

சர்வதேச நாணய நிதியம் ஆதரவளித்தாலும் இல்லாவிட்டாலும் பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் இலங்கை மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் கலாநிதி இந்திரஜித் குமாரசுவாமி தெரிவித்துள்ளார்.

அத்துடன், இந்த மானியத் திட்டத்திற்கு அதிக பணம் செலவழித்ததன் காரணமாக வரவு செலவுத் திட்டப் பற்றாக்குறை மேலும் அதிகரித்தமையும் இலங்கையின் பொருளாதார நெருக்கடியின் வளர்ச்சிக்கு ஒரு காரணமாக இருந்ததாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Exit mobile version