Home செய்திகள் மட்டக்களப்புக்கு ஜேர்மன் பாராளுமன்ற உறுப்பினர் பயணம்

மட்டக்களப்புக்கு ஜேர்மன் பாராளுமன்ற உறுப்பினர் பயணம்

ஜேர்மன் பாராளுமன்ற உறுப்பினர் மட்டக்களப்புக்கு விஜயம்

 ஜேர்மன் பாராளுமன்ற உறுப்பினர் மட்டக்களப்புக்கு விஜயம்

ஜேர்மன் பாராளுமன்ற உறுப்பினர் மோஹாத்  மட்டக்களப்பு மாநகரசபைக்கு விஜயம் மேற்கொண்டார்.

மட்டக்களப்பு மாநகரசபையின் முதல்வர் தி.சரவணபவன் அவரை வரவேற்றார்.

2003ஆம் காலப்பகுதியில் ஜேர்மன் பாராளுமன்ற உறுப்பினர் மோஹாத் ஜேர்மனியின் முனீச் மாநகர முதல்வராகயிருந்த காலப்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்ததின் கீழ் பல்வேறு அபிவிருத்திப்பணிகள் மட்டக்களப்பு மாநகரசபைக்குட்பட்ட பகுதியில் முன்னெடுக்கப்பட்டிருந்தது.

மட்டக்களப்பு மாநகரசபைக்கும் ஜேர்மன் முனீச் மாநகரசபைக்கும் இடையில் மேற்கொள்ளப்பட்ட உடன்படியின் கீழ் பெருமளவான திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டிருந்தன.

இந்த நிலையில் கிழக்கு மாகாணத்திற்கு விஜயம் செய்திருந்த ஜேர்மன் முனீச் முன்னாள் முதல்வரும் தற்போதைய பாராளுமன்ற உறுப்பினருமான   மோஹாத்துக்கு மட்டக்களப்பு மாநகரசபைக்கு வருகை தந்திருந்தார்.

இதன்போது மாநகரசபைக்கு உடன்படிக்கையின் கீழ் 2003ஆம் ஆண்டு அன்பளிப்பு செய்யப்பட்ட வாகனங்களையும் பார்வையிட்ட பாராளுமன்ற உறுப்பினர் குறித்த வாகனங்கள் சிறந்தமுறையில் பராமரிக்கப்படுகின்றமை குறித்து முதல்வருக்கு தனது பாராட்டுகளை தெரிவித்தார்.

கடந்த காலத்தில் ஜேர்மன் முனீச் மாநகரசபையினால் மட்டக்களப்பு மாநகரசபையில் மேற்கொள்ளப்பட்ட அபிவிருத்தி பணிகள் மற்றும் உதவிகளுக்கு நன்றி தெரிவித்த மட்டக்களப்பு மாநகரசபை முதல்வர் தி.சரவணபவன்,எதிர்காலத்தில் ஜேர்மன் அரசு ஊடாக ஒப்பந்தங்களை செய்து மேலும் அபிவிருத்திப்பணிகளை எதிர்பார்ப்பதாக தெரிவித்தார்.

இது தொடர்பில் கருத்து தெரிவித்த மாநகரசபை முதல்வர்,
“ஜேர்மன் பாராளுமன்ற உறுப்பினர் மோஹாத்துடன் நடைபெற்ற கலந்துரையாடலில் பல்வேறு விடயங்கள் கலந்துரையாடப்பட்டது. இலங்கை அரசாங்கமானது மட்டக்களப்பு மாநகரசபை மட்டுமின்றி தமிழ் பகுதிகளை மாற்றந்தாய் மனப்பான்மையுடனேயே நோக்கிவருகின்றது.

மட்டக்களப்பு மாநகரசபையின் 90வீதத்திற்கும் அதிகமான வளங்கள் அரசார்பற்ற நிறுவனங்களினால் நன்கொடை செய்யப்பட்டவையாகவேயிருக்கின்றது.

மத்திய அரசாங்கத்தின் மூலம் கிடைக்கும் வளங்கள் மிகமிக குறைவாகும் என்பதை மிகவும் தெளிவாககூறியிருந்தோம்.
யுத்த காலத்திலிருந்த நிலைப்பாடுகளே யுத்தம் மௌனிக்கப்பட்டதன் பின்னரும் தமிழர்கள் பகுதிகளில் கடைப்பிடிக்கப்படுகின்றது.

நன்கொடைகள் மூலமாகவும் வெளிநாட்டு உதவிகள் மூலமாகவுமே வடக்கு கிழக்கு பகுதிகளில் நடைபெறும் அபிவிருத்தி திட்டங்களுக்கான நிதிகள் கிடைக்கின்றது. மத்திய அரசாங்கத்தின் சொந்த நிதியுதவிகள் என்பது மிகவும் குறைவானதாகவேயிருக்கின்றது.

பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான நிதியொதுக்கீடுகள் மட்டுமே உறுதிப்படுத்தப்பட்ட ஒதுக்கீடாக வருகின்றது என்பதை தெளிவாக எடுத்துக் கூறியிருக்கின்றோம்.

மட்டக்களப்பு மாநகரசபையினை பொறுத்த வரையில் சொந்த நிதியூடாகவும் அரசார்பற்ற நிறுவனங்கள் ஊடாகவுமே வளங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளன. இந்த நிலைமையே தொடர்ந்துயிருந்துவருகின்றது.

இந்த நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக ஜனாதிபதி வெளியேறுமாறு போராட்டங்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கும் காலத்தில் வெறுமனே நாட்காலிகளை மாற்றாமல் அரசியலமைப்பில் ஒரு நிரந்தர மாற்றத்தினை ஏற்படுத்துவதன் மூலமே இந்த நாட்டில் பொருளாதார முன்னேற்றத்தினை காணமுடியும்” என்றார்.

Exit mobile version