பயணிகளால் நிரம்பி வழியும் தொடருந்துகள்
தற்போது நிலவும் எரிபொருள் நெருக்கடியால், தொடருந்து பயணிகள் கூட்டம் அதிகரித்துள்ளது.
அலுவலக நேரங்களில் ஓடும் தொடருந்துகளில் அதிகமான பயணிகள் காணப்படுகின்றனர். நடைபாதைகள் அனைத்தும் பயணிகளால் நிரம்பியுள்ளன.
இதேவேளை பேருந்து சேவைகள் 90 வீதத்தால் வீழ்ச்சியடைந்துள்ளதாக தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
தற்போது நிலவும் எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக எதிர்காலத்தில் பேருந்து சேவைகள் முற்றாக ஸ்தம்பிதம் அடையலாம் என அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.