ஒரே நாளில் 216 பேர் பலி! இலங்கையில் அச்சமளிக்கும் கொரோனா மரணங்கள்

இலங்கையில் அச்சமளிக்கும் கொரோனாஇலங்கையில் அச்சமளிக்கும் கொரோனா

இலங்கையில் அச்சமளிக்கும் கொரோனா: நாட்டில் கொரோனா தொற்றால் ஒரே நாளில் 216 பேர் உயிரிழந்தனர். இவர்கள் அனைவரும் நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தார்கள் என்று அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்தது.

இறந்தவர்களில் மூன்று ஆண்களும், இரு பெண்களுமாக 5 பேர் 30 வயதுக்கு கீழ்பட்டவர் களாவர். 21 ஆண்களும், 20 பெண்களுமாக 41 பேர் 30 – 59 வயது பிரிவினராவார். 91 ஆண்களும், 79 பெண்களுமாக 170 பேர் 60 வயதுக்கு மேற்பட்டவர்களாவர்.

இந்த மரணங்களின் எண்ணிக்கையுடன் தொற்றால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 8 ஆயிரத்து 991 ஆக உயர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ilakku-Weekly-Epaper-145-August-22-2021