Home செய்திகள் இரண்டு வயது சிறுவனுடன் நான்கு ஈழத்தமிழர்கள் அகதிகளாக தமிழகத்தில் தஞ்சம்

இரண்டு வயது சிறுவனுடன் நான்கு ஈழத்தமிழர்கள் அகதிகளாக தமிழகத்தில் தஞ்சம்

நான்கு ஈழத்தமிழர்கள் அகதிகளாக தமிழகத்தில்

இரண்டு வயது சிறுவன் உட்பட நான்கு ஈழத்தமிழர்கள் அகதிகளாக தமிழகத்தில் தஞ்சமடைந்துள்ளனர்.

இதுதொடர்பில் மேலும் தெரியவருகையில்,

இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி நிலை காரணமாக அன்றாட வாழ்வை முன்னெடுக்க முடியாது திண்டாடும் நிலையில் இலங்கையில் இருந்து தமிழகத்திற்கு அகதிகளாக  படகின் மூலம் சென்றுள்ளனர்.

தலைமன்னார் பகுதியில் வசித்துவந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த நால்வரே இவ்வாறு தனுஷ்கோடி பகுதியை சென்றடைந்துள்ளனர்.

தனுஷ்கோடி பகுதியில் கரையிறங்கிய இவர்களை கடலோர காவல்படையினர் விசாரணைக்காக மெரைன் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றுள்ளனர்.

முன்னதாக இலங்கையில் இருந்து 16 ஈழத்தமிழர்கள் அகதிகளாக தமிழகம் சென்றிருந்த நிலையில் தற்போது மேலும் நால்வர் அகதிகளாக சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Exit mobile version