Home செய்திகள் கோவிட் தொற்று காரணமாக முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீர காலமானார்

கோவிட் தொற்று காரணமாக முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீர காலமானார்

240460437 2019858031521422 7709492867878823596 n கோவிட் தொற்று காரணமாக முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீர காலமானார்

கோவிட் தொற்று காரணமாக சிகிச்சை பெற்று வந்த நிலையில், முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீர வயது(65) உயிரிழந்துள்ளார்.

மங்கள சமரவீரவிற்கு கோவிட் – 19 தொற்று ஏற்பட்ட நிலையில் கொழும்பில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அவர் கோவிட் – 19 தொடர்பான நிமோனியா காய்ச்சல் ஏற்பட்டதால் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை வழங்கப்பட்டு வந்ததாக  கூறப்படுகின்றது.

இந்த நிலையிலேயே அவர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

*இலங்கையின் தென் பகுதியான மாத்தறை மாவட்டத்தில் 1956ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 21ம் நாள் மங்கள சமரவீர பிறந்தார்.

*1983ம் ஆண்டு ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் ஊடாக, தனது அரசியல் வாழ்க்கையை மங்கள சமரவீர ஆரம்பித்திருந்தார்.

*1989ம் ஆண்டு நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டு, பாராளுமன்ற பிரவேசத்தை பெற்றார்.

*1994ம் ஆண்டு சந்திரிகா பண்டார நாயக்க குமாரதுங்கவின் தலைமையில் ஆட்சி அமைத்த அரசாங்கத்தில் தபால் மற்றும் தொலைத் தொடர்பு அமைச்சராக மங்கள சமரவீர நியமிக்கப்பட்டிருந்தார்.

*2004ம் ஆண்டு துறைமுகம், விமான சேவைகள் மற்றும் ஊடகத்துறை அமைச்சராகவும் அவர் கடமையாற்றியிருந்தார்.

*2005ம் ஆண்டு முதல் 2007ம் ஆண்டு வரையான காலப் பகுதியிலும், 2015ம் ஆண்டு முதல் 2017ம் ஆண்டு வரையான காலப் பகுதியிலும் மங்கள சமரவீர வெளிவிவகார அமைச்சராக கடமையாற்றியிருந்தார்.

*2017ம் ஆண்டு முதல் 2019ம் ஆண்டு வரை இலங்கையின் நிதி அமைச்சராக, மங்கள சமரவீர செயற்பட்டிருந்தார்.

சுமார் 35 வருடங்களுக்கு மேல் அரசியல் அனுபவத்தை கொண்ட மங்கள சமரவீர, 2019ம் ஆண்டு அரசியலிலிருந்து ஓய்வு பெற்றமை குறிப்பிடத்தக்கது.

Exit mobile version