இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும் எம்.பி.யுமான ராகுல் காந்தி கைது

இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும்  பாராளுமன்ற உறுப்பினருமான ராகுல் காந்தி கைது செய்யப்பட்டுள்ளார்.

நேஷனல் ஹெரால்டு வழக்கில் சோனியா காந்தியிடம் விசாரணை செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து, பாராளுமன்றத்தில் இருந்து விஜய் சௌக் பகுதி வரை பேரணியாக செல்லவிருந்த நிலையில் கைது செய்யப்பட்டு தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளார்.