வடக்கு ஆப்பிரிக்க நாடான அல்ஜீரியா, காட்டுத் தீ பாதிப்பினால் பெரும் பாதிப்பை சந்தித்து வருகிறது. காட்டுத் தீயை கட்டுப்படுத்த தீயணைப்பு வீரர்கள் போராடி வருகின்றனர். காட்டுத் தீக்கு இதுவரை 34 பேர் பலியாகியுள்ளனர். பலர் வீடுகளை இழந்துள்ளனர் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த நிலையில், 90-க்கும் அதிகமான இடங்களில் காட்டுத் தீ ஏற்பட்டுள்ளது. ஐந்தில் நான்கு பகுதியை அணைத்துள்ளதாக அல்ஜீரியா அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தொடர்ந்து மீட்புப் பணி நடந்து வருகிறது. தீவிர காற்றினால் அல்ஜீரியாவில் ஏற்பட்டுள்ள காட்டுத் தீ, அண்டை நாடான துனீசியாவிலும் பரவி வருகிறது.
#Algeria : 34 people have now died as result of forest fires #الجزائر pic.twitter.com/564Qhnv6oM
— sebastian usher (@sebusher) July 25, 2023
பூமியின் வெப்ப உயர்வுக் காரணமாக உலகின் பல நாடுகளில் வெப்ப அலை நிலவுகிறது. சீனா, அமெரிக்கா, ஐரோப்பா, வட ஆப்பிரிக்காவில் கடுமையான வெப்ப அலை நீடிக்கிறது. கடந்த வாரம் கீரிஸில் காட்டுத் தீ ஏற்பட்டு மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்த பாதிப்பால் மனிதர்கள் மட்டும் பாதிப்பை எதிர்கொள்ளவில்லை. அனைத்து உயிர்களும் பெரும் பேரிடர்களை சந்தித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.