அந்நியச் செலாவணி நெருக்கடி: 3 நாடுகளிலுள்ள இலங்கைத் தூதரகங்கள் மூடப்படுகின்றன

அந்நியச் செலாவணி நெருக்கடி

இலங்கை எதிர்கொண்டுள்ள பாரிய அந்நியச் செலாவணி நெருக்கடி காரணமாக வெளிநாடுகளிலுள்ள இரண்டு இலங்கைத் தூதரகங்களையும், ஒரு துணைத் தூதரகத்தையும் மூடுவதற்கு  வெளிவிவகார அமைச்சு  நடவடிக்கையை எடுத்துள்ளது என தகவல் வெளியாகியுள்ளது.

அதன் படி ஈராக்கின் பாக்தாத்திலுள்ள இலங்கைத் தூதரகம், நோர்வேயின் ஒஸ்லோவில் உள்ள இலங்கைத் தூதரகம் மற்றும் அவுஸ்திரேலியாவின் சிட்னியில் உள்ள துணைத் தூதரகம் ஆகியன இம்மாதம் 31ஆம் திகதி முதல் மூடப்படவுள்ளன.

அந்த நாடுகளிலுள்ள அந்தத் தூதரகங்களுக்கான தூதரகப் பணிகள் அருகிலுள்ள நாடுகளில் உள்ள தூதரகங்கள் மற்றும் துணைத் தூதரகங்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும்  தெரிவிக்கப்படுகின்றது.