Home செய்திகள் ராஜபக்ஷர்களுக்கு ஒரு உயிரின் பெறுமதி வெறுமனே ஒரு இலட்சம் ரூபாய் மாத்திரமே – அம்பிகா சற்குணநாதன்

ராஜபக்ஷர்களுக்கு ஒரு உயிரின் பெறுமதி வெறுமனே ஒரு இலட்சம் ரூபாய் மாத்திரமே – அம்பிகா சற்குணநாதன்

ராஜபக்ஷர்களுக்கு ஒரு உயிரின் பெறுமதி

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் குடும்பத்தினருக்கு ஒருதடவை மாத்திரம் ஒரு இலட்சம் ரூபாயை வழங்க அரசாங்கம் எடுத்துள்ள தீர்மானத்திற்கு இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் முன்னாள் ஆணையாளர் சட்டத்தரணி அம்பிகா சற்குணநாதன் விசனம் தெரிவித்துள்ளார்.

காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பில் மரணச் சான்றிதழை பெற்றுக் கொள்வோருக்கு  ஒரு இலட்சம் பணத்தை உதவித் தொகையாக ஒரு தடவை மட்டும் வழங்குவதற்கு அமைச்சரவை நேற்று அனுமதி வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், “காணாமல் ஆக்கப்பட்டோரின் குடும்பங்கள் மரணச் சான்றிதழையோ அல்லது இழப்பீட்டையோ எதிர்பார்க்கவில்லை எனத் தெரிவித்த அவர், மாறாக அவர்கள் உண்மையையும் நீதியையுமே கோருகின்றார்கள்” என அம்பிகா சற்குணநாதன் சுட்டிக்காட்டியுள்ளார்.

ராஜபக்ஷர்களுக்கு ஒரு உயிரின் பெறுமதி வெறுமனே ஒரு இலட்சம் ரூபாய் மாத்திரமே. இது அவமரியாதை செய்யும் வகையிலான மிகமோசமான செயல் என மேலும் அவர் தெரிவித்துள்ளார்.

Exit mobile version