இலங்கையில் இருந்து தமிழ் நாட்டிற்கு தஞ்சமடைந்த அகதிகளின் எண்ணிக்கை 218 ஆக அதிகரிப்பு

தொடரும் பொருளாதார நெருக்கடியால் மேலும் 5 இலங்கை தமிழர்கள்  தமிழ் நாட்டிற்கு தஞ்சமடைந்துள்ளனர்.

இலங்கையில் இருந்து தமிழகத்திற்கு வந்துள்ள அகதிகளின் எண்ணிக்கை 218 ஆக உயர்ந்துள்ளது.

இலங்கையில் ஏற்பட்டுள்ள கடுமையான பொருளாதார நெருக்கடி காரணமாக அங்குள்ள மக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர். இதனால் கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் இலங்கையில் இருந்து 212 இலங்கை தமிழர்கள் தனுஷ்கோடிக்கு அகதிகளாக வந்துள்ளனர்.

இந்நிலையில் இலங்கை கிளிநொச்சி மாவட்டம் பாரதிபுரத்தைச் சேர்ந்த பாரதி டிஸ், அவரது தாய் முனியம்மா, அவரது இரண்டு மகன்கள் ஒரு மகள் என ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் திங்கட்கிழமை அதிகாலை இராமேஸ்வரம் அடுத்துள்ள தனுஷ்கோடி கடற்கரைக்கு வந்துள்ளனர்.

இதையடுத்து தகவலறிந்த காவல்துறையினர், இலங்கை தமிழர்களை மீட்டு மண்டபம் மரைன்  காவல் நிலையத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

விசாரணைக்கு பின்னர் மண்டபம் முகாமில் அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்து கொடுக்கப்பட்டது.