இலங்கையில் இருந்து மேலும் ஐவர் தமிழகத்தில் தஞ்சம்

இலங்கையில் இருந்து படகு மூலம் ஐவர் இன்று அதிகாலை தமிழகம் அரிச்சல் முனைப் பகுதிக்குச் சென்றுள்ளனர்.

இலங்கையில் இருந்து அகதிகளாகப் புறப்பட்ட ஐவரே தமிழகத்தில் தஞ்சம் அடைந்திருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

வவுனியா தேக்கன் தோட்டத்தைச் சேர்ந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தாய், தந்தை மற்றும் 3 சிறுவர்களே இவ்வாறு தமிழகத்திற்கு அகதிகளாகச் சென்றடைந்துள்ளனர்.

இவ்வாறு சென்றவர்களிடம் காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.