Tamil News
Home செய்திகள் தும்பு தொழிற்சாலையில் தீ விபத்து – 150 மில்லியன் ரூபாய்கள் இழப்பு

தும்பு தொழிற்சாலையில் தீ விபத்து – 150 மில்லியன் ரூபாய்கள் இழப்பு

இலங்கையின் புத்தளம் மாவட்டத்தில் உள்ள விருதோட தும்பு தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தினால் 150 மில்லியன் ரூபாய்கள் சேதம் ஏற்பட்டுள்ளதாக நிறுவனத்தின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சீனாவுக்கு ஏற்றுமதி செய்வதற்காக தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்த தும்பு களஞ்சியத்தில் நேற்று (03) மாலை திடீரென ஏற்பட்ட தீ விபத்தினால் இந்த அனர்த்தம் நிகழ்ந்துள்ளது.

புத்தளம் மற்றும் சிலாபம் பகுதிகளைச் சேர்ந்த தீயணைப்பு படையினர் 4 மணிநேர முயற்சியின் பின் தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்திருந்தனர். இந்த விபத்தில் இயந்திரங்களும் சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Exit mobile version