கடந்த ஒரு வார காலத்திற்குள் வடக்கு கடற்கரை பிரதேசங்களில் அடையாளம் தெரியாத 5 சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.
இதனிடையே, சடலங்களைஅடையாளம் காண்பதற்கான நடவடிக்கைகளை காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.
கடந்த 2ம் திகதி யாழ். வடமராட்சி கிழக்கு, சுண்டிக்குளம் கடற்கரையில் பகுதியிலும் கடந்த செவ்வாய்க்கிழமை யாழ். வெற்றிலைக்கேணி கடற்கரையிலும் சடலங்கள் மீட்கப்பட்ட நிலையில், யாழ். வடமராட்சி – மணற்காடு, வல்வெட்டித்துறை ஊரிக்காடு, யாழ். நெடுந்தீவு – ஒற்றைப்பனை கடற்பரப்புகளிலும் அடையாளம் காண முடியாத சடலங்கள் மீட்கப்பட்டன.
கரையொதுங்கிய 03 சடலங்கள் பருத்தித்துறை வைத்தியசாலையிலும், யாழ். போதனா வைத்தியசாலையில் ஒரு சடலமும் வைக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
சடலம், இதுவரை அடையாளம் காணப்படாத நிலையில், விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.