Home செய்திகள் மீனவர் கொல்லப் பட்டமைக்கு நீதி வேண்டி யாழில் போராட்டம்

மீனவர் கொல்லப் பட்டமைக்கு நீதி வேண்டி யாழில் போராட்டம்

நீதி வேண்டி யாழில் போராட்டம்

நீதி வேண்டி யாழில் போராட்டம்: யாழ்ப்பாணம்–மாதகல் கடற்பரப்பில் கொல்லப்பட்ட மீனவர் எட்வேட் மரியசீலனின் படுகொலைக்கு நீதி வேண்டி இன்று போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு, கடலுக்கு மீன் பிடிக்கச் சென்ற குறித்த மீனவர் அதிகாலை மாதகல் கடற்பரப்பில் சடலாமாக மீட்கப்பட்டிருந்தார். கடற்படையினரின் படகு மோதியே குறித்த மீனவர் கொல்லப்பட்டதாக மக்கள் குற்றம்சாட்டியுள்ள நிலையில், இன்றைய தினம் போராட்டமும் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

உயிரிழந்தவரின் இறுதிச் சடங்கான இன்று, பொது மக்கள், மீனவர்கள், அரசியல் பிரமுகர்கள் இணைந்து இந்த போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.‘கடல் கொலைகள் நிறுத்தப்பட வேண்டும்’, ‘கடல் விபத்துகளுக்கு இழப்பீடு’, ஆகிய பதாதைகளை ஏந்தியவாறு போராட்டத்தில் ஈடுபட்டமை குறிப்பிடத்தக்கது.

Exit mobile version