Tamil News
Home செய்திகள் இலங்கைக்கு உதவுவதாக FAO பிரதமரிடம் உறுதி

இலங்கைக்கு உதவுவதாக FAO பிரதமரிடம் உறுதி

இலங்கையில் உணவுப் பற்றாக்குறை அதிகரித்து வரும் நிலையில், உணவுப் பொருட்களைப் பெற்றுக் கொள்வதற்கான உதவிகளைப் பெறுவதற்கு இலங்கைக்கு ஐக்கிய நாடுகள் சபையின் உணவு மற்றும் விவசாய அமைப்பு (FAO) ஆதரவு வழங்க உறுதியளித்துள்ளதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

“வளர்ந்து வரும் உணவுப் பற்றாக்குறையைச் சமாளிக்க சர்வதேச உதவிகளைப் பெற இலங்கைக்கு உதவுவதாக FAO தன்னுடன் ஒரு கலந்துரையாடலில் உறுதியளித்தது” என பிரதமர் தனது சமீபத்திய முகநூல் பதிவில் தெரிவித்துள்ளார்.

Exit mobile version