உள்ளூராட்சி சபைகளின் பதவி காலம் நீடிப்பு

உள்ளூராட்சி சபைகளின் பதவி காலம்நாட்டின் அனைத்து உள்ளூராட்சி சபைகளின் பதவி காலம் ஒரு வருடத்தால் நீடிக்கப்பட்டுள்ளதுஇது தொடர்பான அதிவிசேட வர்த்தமானி நேற்றிரவு வெளியிடப்பட்டது.

கடந்த 2018ஆம் ஆண்டு பெப்ரவரி 10ஆம் திகதி உள்ளுராட்சி சபைகளுக்கான தேர்தல் நடத்தப்பட்டது. இவற்றின் பதவிக்காலம் இந்த ஆண்டு பெப்ரவரி மாதத்துடன் நிறைவடைகின்றது.

இந்த நிலையிலேயே, உள்ளூராட்சி சபைகளின் பதவிக்காலத்தை 2023 மார்ச் 19ஆம் திகதி வரை நீடித்து ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.