Tamil News
Home செய்திகள் IMF உடனான பேச்சுக்களில் எதிர்பார்த்தளவு முன்னேற்றம்

IMF உடனான பேச்சுக்களில் எதிர்பார்த்தளவு முன்னேற்றம்

இலங்கையில் நிலவும் பொருளாதார நெருக்கடிகளை நிவர்த்தி செய்து, சிறந்த பொருளாதார நடைமுறையை நாட்டில் ஏற்படுத்துவதற்காக அரசாங்கம், சர்வதேச நாணய நிதியத்தின் ஒத்துழைப்பை பெற்றுக்கொள்ளும் நோக்கத்தில் இடம்பெற்றுவரும் கலந்துரையாடல்கள் உயர் முன்னேற்றத்தை அடைந்துள்ளன என ஜனாதிபதியின் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

மேலும் சர்வதேச நாணய நிதியத்துடனான பேச்சுவார்த்தைகளை வெற்றிகரமாக நிறைவு செய்து, நிதி ஸ்திரத்தன்மையை ஏற்படுத்துவதற்கு தேவையான முதற்கட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும் என்பதே அரசாங்கத்தின் நிலைப்பாடாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version