பாதிரியார்கள், கன்னியாஸ்திரிகள் கூட ஆபாசத்தைப் பார்க்கிறார்கள்: திருத்தந்தை எச்சரிக்கை

பாதிரியார்களும், கன்னியாஸ்திரிகளும் கூட இணையத்தில் ஆபாசப் படங்களைப் பார்க்கும் அனுபவம் அல்லது சலனத்தைப் பெற்றிருப்பதாக வாடிகானில் நடந்த ஒரு கருத்தரங்கில்  திருத்தந்தை பிரான்சிஸ் வேதனையுடன் தெரிவித்துள்ளார்.

டிஜிட்டல் மற்றும் சமூக ஊடகங்களை எவ்வாறு சிறப்பாகப் பயன்படுத்த வேண்டும் என்ற கேள்விக்கு பதிலளிக்கும் போது  திருத்தந்தை பிரான்சிஸ் இந்த கருத்தினை தெரிவித்துள்ளார். சமூக ஊடகங்கள் மற்றும் இணையத்தில் அதிக நேரத்தை வீணாக்க வேண்டாம் என்று பாதிரியார்கள் மற்றும் கன்னியாஸ்திரிகளை அவர் மேலும்  கேட்டுக் கொண்டுள்ளார்.