Tamil News
Home செய்திகள் ஈரோஸ் அமைப்பின் கிளை அலுவலகம் முல்லைத்தீவில்

ஈரோஸ் அமைப்பின் கிளை அலுவலகம் முல்லைத்தீவில்

ஈழப் புரட்சி அமைப்பின் மாவட்டக்கிளை நேற்று முல்லைத்தீவு சிலாவத்தை மாதிரிக் கிராமத்தில் திறந்து வைக்கப்பட்டது. இந்நிகழ்வில், ஈழப்புரட்சி அமைப்பின் கிழக்கு மாகாண இணைப்பாளர் திரு ராஜேந்திரா அலுவலகத்தை திறந்து வைத்தார். அமைப்பின் மூத்த உறுப்பினர் திரு நேசரட்ணம் அலுவலகத்தின் பெயர்ப் பலகையினை திரைநீக்கம் செய்து வைத்தார்.

இந்நிகழ்வில் அமைப்பின் தோழர்களான அருளப்பு ராசநாயகம், மலையக மக்கள் இணைப்பாளர் தோழர் ஜீவன், மூத்த உறுப்பினர் திருச்செல்வம் உட்பட அமைப்பின் தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Exit mobile version