இலங்கைக்கு வருகிறார் எரிக் சொல்ஹெய்ம்

ஐக்கிய நாடுகளின் சுற்றுச் சூழல் வேலைத்திட்டங்களுக்கான நிறைவேற்று பணிப்பாளர்களில் ஒருவரான எரிக் சொல்ஹெய்ம் இன்று இலங்கைக்கு வருகை தரவுள்ளார்.

இந்திய விமான சேவைக்கு சொந்தமான ஏ ஐ 271 என்ற விமானத்தில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடையவுள்ளார்.

இலங்கைக்கு வருகைத்தரவுள்ள எரிக் சொல்ஹெய்ம் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடன் பேச்சுக்களை முன்னெடுக்கவுள்ளார்.

ல்ஹெய்ம், கடந்த 2002 ஆம் ஆண்டு தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இலங்கை அரசாங்கத்திற்கும் இடையில் இடம்பெற்ற சமாதான பேச்சுவார்த்தைகளின் போது சமாதான தூதுவராக செயற்பட்டமை குறிப்பிடத்தக்கது.