இலங்கையர்களுக்கு மலேசியாவில் தொழில்வாய்ப்பு

இலங்கையில் இருந்து 10,000 புலம்பெயர்ந்த பணியாளர்களை அழைப்பதற்கு மலேசிய அமைச்சரவை அனுமதியளித்துள்ளது.

கடந்த 14 ஆம் திகதி இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில் இதற்கான அனுமதி வழங்கப்பட்டதாக மலேசியாவின் மனிதவள அமைச்சர் எம்.சரவணன் தெரிவித்துள்ளார்.

பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்ள இலங்கைக்கு உதவுவதற்கான தமது அரசாங்கத்தின் முயற்சிகளில், இலங்கைத் தொழிலாளர்களை உள்வாங்குவதற்கான தீர்மானமும் ஒன்றாகும்.

இலங்கையின் புலம்பெயர்ந்த தொழிலாளர்களை கொண்டு சம்பந்தப்பட்ட துறைகளில் உள்ள வெற்றிடங்களை நிரப்புவதன் மூலம் அரசாங்கத்தின் நோக்கங்களை ஆதரிக்குமாறு, தொழில்தருநர்களையும், வணிகங்களையும் தாம் கேட்டுக்கொள்வதாக அமைச்சர் சரவணன் இன்று ஒரு அறிக்கையொன்றில் தெரிவித்துள்ளார்.

இலங்கை பணியாளர்களை பணியமர்த்துவதில் ஆர்வமுள்ள தொழில்தருநர்கள் அமைச்சின் புலம்பெயர் தொழிலாளர் முகாமைத்துவ நிலையம் மற்றும் நாட்டின் தொழிலாளர் திணைக்களத்தினை தொடர்புகொள்ளுமாறு அமைச்சர் கோரியுள்ளார்.