அவசரகாலச் சட்டம் பாராளுமன்றில் 57 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றம்

அவசரகாலச் சட்டம் 57 மேலதிக வாக்குகளால் பாராளுமன்றில் நிறைவேற்றப்பட்டது. ஆதரவாக 120 வாக்குகளும் எதிராக 63 வாக்குகளும் அளிக்கப்பட்டன.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பதில் ஜனாதிபதியாக இருந்த போது பொது பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் அவசர நிலையை அமுல்படுத்த நடவடிக்கை எடுத்தார்.

அதன்படி, இந்த அறிவிப்பை வெளியிட்ட 14 நாட்களுக்குள் பாராளுமன்றத்தின் ஒப்புதல் பெறப்பட வேண்டும், இல்லையெனில் அது இரத்து செய்யப்படும்.