Home செய்திகள் இஸ்இலாமிய தீவிரவாத சக்திகளை இல்லாதொழியுங்கள்; ஜனாதிபதிக்கு ஞானசார தேரர் கடிதம்

இஸ்இலாமிய தீவிரவாத சக்திகளை இல்லாதொழியுங்கள்; ஜனாதிபதிக்கு ஞானசார தேரர் கடிதம்

இஸ்இலாமிய தீவிரவாத சக்திகளை இல்லாதொழியுங்கள்நாட்டில் உள்ள தீவிரவாத சக்திகளை சட்டத்தின் முன் நிறுத்தி, இஸ்இலாமிய தீவிரவாத சக்திகளை இல்லாதொழியுங்கள், பாதுகாப்பான நாட்டைக் கட்டியெழுப்ப நடவடிக்கை எடுங்கள் என்று பொதுபலசேனா அமைப்பு, ஜனாதிபதியிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

பொதுபலசேனா அமைப்பின் பொதுச்செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு இவ்வாறு கடிதம் அனுப்பி வைத்துள்ளார். இலங்கையில் மீண்டும் ஒரு பயங்கரவாதத் தாக்குதல் நடைபெறாமல் இருக்க புலனாய்வுத்துறை பலப்படுத்தப்பட வேண்டும் என்றும் அந்தக் கடிதத்தில் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

கடந்த நல்லாட்சி அரசில் புலனாய்வுப் பிரிவை செயலிழக்கச் செய்ததன் காரணமாகவே சஹ்ரான் உட்பட இஸ்லாமிய அடிப்படைவாதிகள் உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதலை நடத்தியனர் என்றும் ஞானசார தேரர் சுட்டிக்காட்டியுள்ளார்.

“நாட்டின் ஸ்திரத்தன்மையை சீர்குலைக்க பல்வேறு சக்திகளும் ஒன்றிணைந்து செயற்படுகின்றன. இலங்கை சீனாவுடன் நெருங்கிச் செயற்படுவதால் சீனாவின் சர்வதேச எதிரிகள் இலங்கையை இலக்கு வைக்கின்றன.

நாட்டில் செயற்படும் சர்வதேச புலனாய்வுத்துறை குறித்து அதிக கவனம் செலுத்த வேண்டும். தமிழீழ விடுதலைப்புலிகளை அழித்ததைப் போன்று இஸ்லாமிய தீவிரவாதத்தையும் அழிக்க வேண்டும்.

மதத் தலைவர்களைப் பயன்படுத்தி உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் சம்பவத்தை வைத்துக்கொண்டு நாட்டில் பல்வேறு பிரச்சினைகளையும் தூண்ட சிலர் முயற்சிக்கின்றனர்” என்றும் அந்தக் கடிதத்தில் ஞானசார தேரர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Exit mobile version