பொருளாதார நெருக்கடி- கிளர்ச்சிவெடிக்கலாம்- ரணில் எச்சரிக்கை

பொருளாதார நெருக்கடி

இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியால் மக்கள் கிளர்ந்தெழக் கூடும் என ஐக்கிய  தேசியக் கட்சியின் தலைவரும் முன்னாள்  பிரதமருமான ரணில் தெரிவித்து்ள்ளார்.

இந்நிலையில் நாட்டில் ஏற்படக்கூடிய நிலைமைகளை தவிர்ப்பதற்கு சர்வதேச நாணய நிதியத்திடம் உடனடியாக சென்று உதவியைப் பெற்றுக் கொள்ள வேண்டும். இல்லை என்றால் ஏற்றுக்கொள்ளக் கூடிய மாற்றுவழியை அரசாங்கம் முன்வைக்க வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் டொலர் பற்றாக்குறை கடுமையான நெருக்கடி  நிலைமைக்கு வந்துள்ளது. இதன் சுமை மக்களால் தாங்கிக்கொள்ள முடியாதளவுக்கு உள்ளது. குறிப்பாக வியாபாரங்கள் வீழ்ச்சி அடைகின்றன. வேலைவாய்ப்புக்கள் இழக்கப்படுகின்றன. விவசாயிகள் கையறு நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். உணவு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.

இவற்றுக்கு உடனடித் தீர்வு அவசியமாகும். கோவிட் தொற்று நெருக்கடி இருந்தாலும்  2021ம் ஆண்டில் சில நாடுகள் பொருளாதார முன்நேற்றத்தை காண்பித்துள்ளன. இதன்படி, இலங்கையும் இந்த பிரச்சினையை நீக்க வேண்டும். இதனால் சர்வதேச நாணய நிதியத்திற்கு  உடனடியாக சென்று நிதியைப் பெற்றுக்கொள்ள வேண்டும். என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.