இலங்கை சந்தித்து வரும் பொருளாதார நெருக்கடி-நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ இந்தியா பயணம்

இலங்கை சந்தித்து வரும் பொருளாதார நெருக்கடி

இலங்கை சந்தித்து வரும் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில், இந்தியாவிடம் கடன் உதவி பெற கையெழுத்திடுவதற்காக  நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ இன்று இந்தியாவிற்கு பயணம் செய்துள்ளார்.

இரண்டு நாள் பயணமாக இந்தியா செல்லும் பசில் ராஜபக்ஷ மத்திய அரசுடன் முக்கியமான பேச்சுவார்த்தைகளில் ஈடுபடவுள்ளார்.

மேலும் இந்தப் பயணத்தின்போது இலங்கையின் எரிபொருள், உணவு மற்றும் மருந்து இறக்குமதிக்கு நிதியளிக்க எதிர்பார்க்கப்படும் ஒரு பில்லியன் அமெரிக்க டொலர் கடனைப் பற்றி நிதியமைச்சர் கலந்துரையாடுவார் என்று நிதியமைச்சு தெரிவித்துள்ளது.

ஏற்கனவே கடந்த ஜனவரி மாதத்தில் இந்திய வெளி விவகாரத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கருடன் பசில் ராஜபக்ஷ பேச்சுவார்த்தை நடத்தினார். அதில், இலங்கையின் பொருளாதாரத்தை வலுப்படுத்தும் இந்தியாவின் திட்டங்கள் மற்றும் முதலீட்டுத் திட்டங்கள் குறித்து விவாதித்திருந்தார்.