நேபாளத்தில் நிலநடுக்கம், 6 பேர் பலி

நேபாளத்தில் ஏற்பட்ட 6.3 அளவிலான நிலநடுக்கம் காரணமாக அங்கு 6 பேர் உயிரிழந்தனர்.

இந்த நிலநடுக்கத்தின் அதிர்வுகள் இந்தியத் தலைநகர் டெல்லியில் நள்ளிரவு தாண்டிய நேரத்தில் உணரப்பட்டது.

டெல்லி தேசிய தலைநகர் மண்டலம் உள்ளிட்ட பகுதிகளில் அதிகாலை இரண்டு மணியளவில் நிலநடுக்கம் உணரப்பட்டதாக இந்தியாவின் நில நடுக்கத்திற்கான தேசிய மையம் தெரிவித்துள்ளது.