நுவரெலியா, ஹாவா எலிய பிரதேசத்தைச் சேர்ந்த இருவரே கைது செய்யப் பட்டுள்ளனர். நுவரெலியா, பிரதான பஸ் தரிப்பிடத்தில் வியாபார நிலைய மொன்றை நடத்திவரும் நபரொருவரும் அவரது நண்பர் ஒருவருமே இவ்வாறு கைது செய்யப் பட்டுள்ளனர்.
நுவரெலியா, கார்கில்ஸ் கட்டட வளாகத்திலுள்ள பிரதான சந்தேக நபருக்குச் சொந்தமான மற்றொரு கடையில் 50 ரூபா வசூலிக்கப் பட்டு, படம் பிரதி யெடுத்துக் கொடுக்கப் பட்டுள்ளமை தெரிய வந்துள்ளது. மேற்படி இருவரையும் நீதிமன்றில் ஆஜர் படுத்தவுள்ள பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற் கொண்டு வருகின்றனர் என்று நுவரெலியா பொலிஸார் மேலும் கூறினார்.