மருந்துவர்கள்:24 மணி நேர அடையாள வேலை நிறுத்தப் போராட்டம்

அடையாள வேலை நிறுத்தப் போராட்டம்

ஐந்து மாவட்டங்களிலுள்ள அரச வைத்தியசாலைகளில் இன்று காலை 8 மணி முதல் 24 மணித்தியால அடையாள வேலை நிறுத்தப் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய மன்னார், திருகோணமலை, பொலன்னறுவை, நுவரெலியா மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களில் உள்ள அரச வைத்தியசாலைகளின் சேவைகள் இந்த தொழிற்சங்க நடவடிக்கையால் பாதிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும் வேலை நிறுத்தத்தால் அவசர சேவைகள் பாதிக்கப்படாது என அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

இடமாற்றம் செய்யும் சபையின் அனுமதியின்றி பயிற்சிக்கு பின்னரான வைத்தியர்களை பணியமர்த்தியமைக்கு எதிராக தாங்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக சங்கத்தின் செயலாளரான வைத்தியர் செனல் பெர்னாண்டோ தெரிவித்தார்.

மன்னார், பொலன்னறுவை, திருகோணமலை, நுவரெலியா மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்கள் சுகாதாரத் துறையைப் பேணுவதில் பாரிய பிரச்சினைகளை எதிர்நோக்கி வருவதாகவும், குறித்த விடயத்தால் மிகவும் பாரதூரமான நிலைமை ஏற்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

Tamil News