ஈழத் தமிழர்களுக்கு பாதுகாப்பான அரசாக எப்பொழுதும் திராவிட முன்னேற்றக் கழகம் தலைமையிலான அரசாங்கம் செயற்படும் என மாநில சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடுவாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி K.S.மஸ்தான் உறுதியளித்துள்ளார்.
எனவே, தமிழகத்தில் உள்ள அகதி முகாம்களில் தங்கியுள்ள ஈழத் தமிழ் அகதிகளை அவர்களின் விருப்பமின்றி இலங்கைக்கு திருப்பி அனுப்ப நடவடிக்கை எடுக்கப்படமாட்டாது என அவர் கூறியதாக இந்தியாவின் முக்கிய ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது.
முகாம்களில் தங்கியுள்ளவர்களின் குடியுரிமை உள்ளிட்ட அனைத்து கோரிக்கைகளும் தமிழக முதல்வரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும் எனவும் அவர் கூறியுள்ளார்.