அரசில் இருந்து வெளியேறிய 41 பாராளுமன்ற உறுப்பினர்கள்
கோட்டா அரசுக்கு உள்ளும் புறமுமாக நெருக்குவாரங்கள் அதிகரித்து வரும் நிலையில் அரசாங்கத்தில் இருந்து வெளியேறுவதாக 41 பாராளுமன்ற உறுப்பினர்கள் அறிவித்துள்ளனர்.
இவ்வாறு அரசாங்கத்தில் இருந்து வெளியேறி சுயாதீனமாக செயற்பட உள்ளதாக உத்தியோகபூர்வமாக அறிவித்த 41 உறுப்பினர்களின் விபரம் வெளியாகியுள்ளது.
பெரமுன கூட்டணியில் இணைந்து செயற்பட்ட 10 கட்சிகளை சேர்ந்த 16 பாராளுமன்ற உறுப்பினர்களும், ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியை சேர்ந்த 14 பாராளுமன்ற உறுப்பினர்களும், பெரமுன கட்சியை சேர்ந்த 11 பாராளுமன்ற உறுப்பினர்களும் இவ்வாறு சுயாதீனமாக செயற்போவதாக அறிவித்துள்ளனர்.
10 கூட்டணி கட்சிகளில் சார்பில் சுயாதீனமாக செயற்படவுள்ள 16 பாராளுமன்ற உறுப்பினர்களின் விபரம்…
- விமல் வீரவன்ச
- உதய பிரபாத் கம்மன்பில
- வாசுதேவ நாணயக்கார
- திஸ்ஸ விதாரண
- டிரான் அலஸ்
- வண.அத்துரலியே ரத்தன தேரர்
- கெவிந்து குமாரதுங்க
- வீரசுமண வீரசிங்க
- அசங்க நவரத்ன
- மொஹமட் முஸம்மில்
- நிமல் பியதிஸ்ஸ
- காமினி வலேகொட
- ஏ. எல். ஏ அதாவுல்லா
- கயாஷான்
- ஜயந்த சமரவீர
- உத்திக பிரேமரத்ன
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியில் இருதுந்து சுயாதீனமாக செயற்பட தீர்மானித்துள்ள 14 பாராளுமன்ற உறுப்பினர்களின் பெயர்கள் வருமாறு,
1- மைத்திரிபால சிறிசேன
2- நிமல் சிறிபால டி சில்வா
3- மஹிந்த அமரவீர
4- தயாசிறி ஜயசேகர
5- துமிந்த திசாநாயக்க
6- லசந்த அழகியவன்ன
7- ரஞ்சித் சியம்பலாபிட்டிய
8- ஜகத் புஷ்பகுமார
9- ஷான் விஜயலால் டி சில்வா
10- ஷாந்த பண்டார
11- துஷ்மந்த மித்ரபால
12- சுரேன் ராகவன்
13- அங்கஜன் இராமநாதன்
14- சம்பத் தசநாயக்க
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியில் இருந்து சுயாதீனமாக செயற்பட தீர்மானித்துள்ள 11 பாராளுமன்ற உறுப்பினர்களின் பெயர்கள் வருமாறு,
1- அநுர பிரியதர்ஷன யாப்பா
2- ஜோன் செனவிரட்ன
3- சுசில் பிரேம ஜயந்த
4- சந்திம வீரக்கொடி
5- நலின் பெர்ணான்டோ
6- நிமல் லான்சா
7- சுதர்ஷினி பெர்ணான்டோ புள்ளே
8- பிரியங்கர ஜயரட்ன
9- டிரான் அலஸ்
10- ரொசான் ரணசிங்க
11- ஜயரட்ன ஹேரத்