Online கற்பித்தல் நடவடிக்கைகளில் இருந்து விலகி ஆசிரியர் – அதிபர்கள் முன்னெடுத்துள்ள தொழிற்சங்க நடவடிக்கை இன்று 22 ஆவது நாளாக முன்னெடுக்கப் படுகின்றது.
அத்தோடு தமது கோரிக்கைகளுக்கு தீர்வு கிடைக்கும் வரை தொழிற்சங்க நடவடிக்கையை கைவிடப் போவதில்லை என கல்வி அமைச்சின் செயலாளருக்கு அறிவிக்கப் பட்டுள்ளது.
இதையடுத்து இலங்கை ஆசிரியர் சங்கத்தின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு, மன்னார், திருகோணமலை, ஆகிய நகரங்களில் ஆர்ப்பாட்ட பேரணிகள் இன்று காலை நடைபெற்றன.