ஹிஷாலினியின் மரணத்திற்கு நீதிவேண்டி வவுனியாவில் ஆர்ப்பாட்டம்

IMG20210722102958 01 ஹிஷாலினியின் மரணத்திற்கு நீதிவேண்டி வவுனியாவில் ஆர்ப்பாட்டம்

முன்னாள் அமைச்சர் ரிசாட் பதியூதீன் வீட்டில் பணிப் பெண்ணாக இருந்து உயிரிழந்த ஹிஷாலினியின் மணரத்திற்கு  நீதிவேண்டி வவுனியாவில் ஆர்ப்பாட்டம் ஒன்று இன்று  முன்னெடுக்கப் பட்டது.

நீதிக்கான மக்கள் அமைப்பின் ஏற்பாட்டில் வவுனியா காமினி மகா வித்தியாலயத்திற்கு முன்பாக குறித்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப் பட்டது.

இதன்போது கருத்து தெரிவித்த ஆர்பாட்டக்காரர்கள்,

IMG20210722103147 01 ஹிஷாலினியின் மரணத்திற்கு நீதிவேண்டி வவுனியாவில் ஆர்ப்பாட்டம்

இலங்கையில் பெண்கள் மற்றும் சிறுவர்களிற் கெதிரான குற்றங்கள் பாரிய பிரச்சினையாக உருவெடுத்துள்ளது. அந்த வகையில் கொழும்பில் மரணமடைந்த ஹிஷாலினி என்ற சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப் பட்டுள்ளதுடன் தீக்காயமடைந்த நிலையில் உயிரிழந்திருந்தார்.

இது ஒரு பாரிய குற்றமாக காணப்படுவதுடன் குறித்த குற்றத்தினை மறைப்பதற்காக சிறுமி எரியூட்டப்பட்டு கொல்லப் பட்டமையை நாம் வன்மையாக கண்டிக்கிறோம். சிறுமியின் மரணத்திற்கு நியாயம் கிடைக்க வேண்டும் என்று தொடர்புடைய அதிகாரிகளை கோரி நிற்கின்றோம்.

அதே போன்று கிளிநொச்சி கல்மடுப் பகுதியில் 6 வயது சிறுமி பாலியல் கொடுமைக்கு உள்ளாக்கப் பட்டிருந்தார். அத்துடன் இணையத் தளங்களில் சிறுமிகள் விற்பனை போன்ற துஸ்பிரயோக சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருவது எமக்கு கவலை யளிக்கின்றது.

IMG20210722103238 01 ஹிஷாலினியின் மரணத்திற்கு நீதிவேண்டி வவுனியாவில் ஆர்ப்பாட்டம்

இதனால் நாட்டின் பெண்களுக்கான பாதுகாப்பு உறுதிப் படுத்தப்படுவது கேள்விக் குறியாகவுள்ளது. எனவே எமது நாட்டின் பெண்கள் சிறுவர்கள் சுய கௌரவத்துடன் பாதுகாப்பாக வாழும் சூழ்நிலையை அரசு பெற்றுக் கொடுக்க வேண்டும். ஹிஷாலினி போன்ற பாதிக்கப்பட்ட பெண்கள் மற்றும் சிறுமிகளிற்கு நீதி வழங்கப்பட வேண்டும் என்றனர்.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் சிறுவர்கள் பெண்கள் உரிமைகளுக்கு மதிப்பளித்து பாதுகாப்போம், இணையவழி பாலியல் துஷ்பிரயோகங்களை நிறுத்து, மானிட பண்புகள் எம் நாட்டில் மரணித்து விட்டதா?, வித்தியாவை அடுத்து ஹிசாலினியா? போன்றவாறான பதாதைகளையும் ஏந்தியிருந்தனர்.

இலக்கு இந்த வார மின்னிதழ் 139

ilakku-weekly-epaper-139-july-18-2021