Tamil News
Home செய்திகள் எஞ்சியுள்ள 34 அரசியல் கைதிகளையும் விடுவிக்குமாறு கோரிக்கை

எஞ்சியுள்ள 34 அரசியல் கைதிகளையும் விடுவிக்குமாறு கோரிக்கை

நீண்ட காலமாக சிறைகளில் உள்ள தமிழ் அரசியல் கைதிகளின் உறவுகளுக்கும்  நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்சவுக்கும்  இடையில்  யாழில்  சந்திப்பொன்று இடம்பெற்றது.

குறித்த சந்திப்பில் நீண்ட காலமாக தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் அண்மையில் விடுவிக்கப்பட்ட நிலையில் எஞ்சியுள்ள 34 பேரையும் விடுவிக்குமாறு கோரிக்கை விடுத்தனர்.

இதன் போது கருத்து தெரிவித்த அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் சாதகமான நிலைப்பாட்டியே பின்பற்றி வருகிறோம். அண்மையில் பலர் விடுதலை செய்யப்பட்டுள்ள நிலையில் ,சிறைச்சாலைகளில் உள்ளவர்களின் வழக்கு நிலைமைகள் தொடர்பில் சட்டமா அதிபருடன் தொடர்ந்து கலந்துரையாடி விடுதலை செய்வதற்குரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என தெரிவித்தார்.

குறித்த சந்திப்பில் பாராளுமன்ற உறுப்பினர் நீதியரசர் விக்னேஸ்வரன் மற்றும் வடமாகாண ஆளுநரின் செயலாளர் வாகீசன் மற்றும் அமைச்சர் விஜயதாச ராஜபக்சவின் நண்பர் கருணாகரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Exit mobile version