அதியுயர் வலயங்கள் பிரகடனம்- கொழும்பில் நீதிமன்றத்தின் முன் ஒன்றுகூடிய போராட்டக்காரர்கள்

கொழும்பின் சில பகுதிகளை அதியுயர்வலயங்களாக அறிவித்து ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் வெளியிடப்பட்ட வர்த்தமானிக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

கொழும்பு – புதுக்கடை நீதவான் நீதிமன்றத்தின் முன்பாக இன்றைய தினம் குறித்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.

குறித்த ஆர்ப்பாட்டத்தை சட்டத்தரணிகள், சிவில் செயற்பாட்டாளர்கள், தொழிற்சங்கக் கூட்டணியின் தலைவர்கள் உள்ளிட்டோர் ஒன்றிணைந்து முன்னெடுத்திருந்தனர்.