Home செய்திகள் கிண்ணியாவில் இந்தோனேஷியா தூதரகத்தின் ஏற்பாட்டில் கலாச்சார பரிமாற்ற நிகழ்வு

கிண்ணியாவில் இந்தோனேஷியா தூதரகத்தின் ஏற்பாட்டில் கலாச்சார பரிமாற்ற நிகழ்வு

IMG 20211121 WA0066 கிண்ணியாவில் இந்தோனேஷியா தூதரகத்தின் ஏற்பாட்டில் கலாச்சார பரிமாற்ற நிகழ்வு

இந்தோனேஷியா தூதரகத்தின் ஏற்பாட்டில் கலாச்சார பரிமாற்ற நிகழ்வு ஒன்று  திருகோணமலை மாவட்டம், கிண்ணியாவில் நடைபெற்றது.

இந்தோனேசியாவின் புகழ்பெற்ற நடனம் மற்றும் பாரம்பரிய இசைக் கருவியான மூங்கிலால் ஆன  இசைக்கருவியை  இசைத்தல் போன்ற நிகழ்வுடன் இலங்கை திருகோணாமலை கிண்ணியா பிரதேசத்தில் பாரம்பரிய இசைக் கருவிகளைக் கொண்டு பாடல்கள், மற்றும் தகரா பாவா  பாடல்கள் சீனடி விளையாட்டு என்பனவற்றை இரு நாடுகளுக்கான கலாச்சார நிகழ்வாக பகிர்ந்து கொண்டன.

ஜோர்தன் நாட்டுக்கான முன்னாள் தூதுவர் ஏ ,எல் ,எம் லாபிர் தலைமையில் கிண்ணியா விஷன் கேட்போர் கூடத்தில் இந்நிகழ்வு நடைபெற்றது.

நிகழ்வில் யுனெஸ்கோ நிறுவனத்தினால்  பாரம்பரிய இசை என்ற அங்கீகாரத்தை பெற்ற மூங்கிலால் ஆன இசைக்கருவியை இசைத்து காட்டினர்.

மேலும் இந்தோனேசியா நாட்டின் பிரபல நடன நிகழ்வுகளும் இடம்பெற்றன.

இந்நிகழ்வில் இந்தோனேசிய நாட்டின் பிரதி தூதுவரும் கலாச்சார நிகழ்வின் பிரதம உத்தியோகத்தருமான  ஹிரோ பிரே இட் நோ பிரதம அதிதியாக கலந்து கொண்டு நிகழ்வை ஆரம்பித்து வைத்தார் இந்நிகழ்வில் நினைவுச் சின்னங்களும் வழங்கி வைக்கப்பட்டன.

Exit mobile version