கொரோனா தடுப்பூசி – உலகிற்கு முன்மாதிரியாக திகழும் கியூபா

உலகிற்கு முன்மாதிரியாக திகழும் கியூபா

உலகிற்கு முன்மாதிரியாக திகழும் கியூபா, இரண்டு வயது குழந்தைகளுக்கும்  கொரோனா தடுப்பூசியை செலுத்தி கவனத்தை யீர்த்துள்ளது.

“கொரோனாவுக்கு எதிரான பேராயுதம் தடுப்பூசி. அனைவரும் தடுப்பூசி செலுத்திக் கொள்ளுங்கள். இந்த உலகில் ஒவ்வொருவரும் பாதுகாப்பானவராக மாறும் வரை ஒருவருமே பாதுகாப்பானவர் இல்லை”  என உலக சுகாதார மையம்  அறிவுறுத்தி வருகின்றது.

இந்நிலையில், கியூபாவில் 2 வயது முதல் 10 வயதுடைய குழந்தைகளுக்கு  கொரோனா தடுப்பூசியை  செலுத்தும் பணி தொடங்கப்பட்டுள்ளது.

மேலும் கியூபா நாட்டு மக்களுக்கு சொந்தமாக தயாரிக்கப்பட்ட தடுப்பூசியையே இரண்டு வயது குழந்தைகளுக்கு செலுத்தி வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

ilakku-Weekly-Epaper-146-September-05-2021