எட்டு நாட்களாக இலங்கை கடற்பரப்பில் தரித்து நிற்கும் கச்சா எண்ணெய்க் கப்பல்

ஒரு இலட்சம் மெற்றிக் தொன் கச்சா எண்ணெய் கொண்ட கப்பல் ஒன்று எட்டு நாட்களாக இலங்கை கடற்பரப்பில் பணம் செலுத்த முடியாமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

யூரல் நிறுவனத்திற்குச் சொந்தமான இந்தக் கப்பல் ஆகஸ்ட் 23ஆம் திகதி இலங்கைக்கு வந்ததாகவும், கப்பலுக்கு டொலர்கள் செலுத்த முடியாத காரணத்தினால் நாளொன்றுக்கு தாமதக் கட்டணமாக மட்டும் 75,000 அமெரிக்க டொலர்களை செலுத்த வேண்டியுள்ளதாகவும் தெரிவிக்கின்றன.

இந்த யூரல் கப்பலின் கச்சா எண்ணெய் மூலம் 52 சதவீதம் கறுப்பு எண்ணெய், 21 சதவீதம் டீசல் மற்றும் 12 சதவீதம் பெட்ரோல் பெறப்படும் என்று தெரிவிக்கப்படுகிறது .