Tamil News
Home செய்திகள் நாடாளுமன்ற தேர்தல்;வேட்பாளர்களாக கொலையாளிகள்,ஊழல்வாதிகள்

நாடாளுமன்ற தேர்தல்;வேட்பாளர்களாக கொலையாளிகள்,ஊழல்வாதிகள்

நாடாளுமன்றத்திற்கு போட்டியிடுபவர்களில் பெரும்பாலானவர்கள் முன்னைய உறுப்பினர்கள்

சிறீலங்காவில் எதிர்வரும் மாதம் 5 ஆம் நாள் இடம்பெறவுள்ள நாடாளுமன்றத்தில் போட்டியிடும் கட்சிகள் சார்பாக நிறுத்தப்பட்ட வேட்பளர்களில் பெருமளவான வேட்பாளர்கள் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களாகவே உள்ளனர்.

தற்போது உள்ள 225 நாடாளுமன்ற உறுப்பினர்களில் 200 பேர் மீண்டும் போட்டியிடுகின்றனர். அவர்களில் படுகொலையாளிகள், நிதி மோசடியில் ஈடுபட்டவர்கள், ஊழல்களில் ஈடுபட்டவர்கள், சட்டவிதிகளை மதிக்காதவர்கள் என பலரும் உள்ளனர்.

தென்னிலங்கையில் புதிதாக யாரையும் களமிறக்குவதை முக்கிய கட்சிகள் தவிர்த்திருப்பது ஒருபுறம் இருக்க வடக்கு கிழக்கிலும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் வெவ்வேறு கட்சிகளில் போட்டியிடுவது இங்கு குறிப்பிடத்தக்கது.

Exit mobile version