இலங்கையில் இதுவரை 13429 பேர் கொரோனாவால் உயிரிழப்பு

இதுவரை 13429 பேர் கொரோனாவால் உயிரிழ


இலங்கையில் நேற்று 674 கொரோனா நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டனர். இதுவரை 13429 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.

இதுவரை நாட்டில்  5,29,755 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதேவேளை, மேலும் 21 கொரோனா மரணங்கள் பதிவாகியுள்ளன.

ஒக்டோபர் மாதம் 13 ஆம் திகதி இந்த மரணங்கள் அனைத்தும் பதிவாகியதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் உறுதி செய்யப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது.

உயிரிழந்தவர்களில் 15 ஆண்களும் 06 பெண்களும் அடங்குகின்றனர். உயிரிழந்த 21 பேரில் 16 பேர் 60 வயதிற்கு மேற்பட்டவர்களாவர்.

அதற்கமைய, நாட்டில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 13,429 ஆக அதிகரித்துள்ளது.

ilakku Weekly Epaper 151 october 10 2021 Ad இலங்கையில் இதுவரை 13429 பேர் கொரோனாவால் உயிரிழப்பு